Tuesday, December 8, 2009

Guru Peyarchi 2009 Palangal (Tamil)

குருபெயர்ச்சி பலன்கள்   
 15 டிசம்பர்  2009

மகர ராசியில் இருந்து குரு கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார் .இதன் பலன்களும் , பரிஹரங்களும் கிழே கொடுக்கப்பட்டுள்ளது .

மேஷம் 
              கடனாக கொடுத்த பணம் திரும்பும் , வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும் , குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் , சம்பளம் உயரும் .

ரிஷபம் 
              வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் , வேலை உள்ளவர்களுக்கு பதவி உயர்வு ஏற்படும் . புதிதாக முதலிடு செய்ய வாய்ப்புள்ளது , வழக்குகள் சாதகமாக அமையும் .

மிதுனம்
              குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடமான கும்பத்தில் அமர்கிறார். இந்த பெயர்ச்சி கடந்த காலத்தில் இருத்த கஷ்ட நிலைமை விலகி குடும்பத்தில் வளமையும் , சந்தோசமும் நிலைத்திட வழி வகுக்கும் .

கடகம் 
              குரு உங்கள் ராசிக்கு எட்டாம் இடமான கும்பத்தில் அமர்தலும் ஐந்து ,ஏழு , ஒன்பது ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு பனிரெண்டு , இரண்டு , நான்காம் இடங்களை பார்க்கிறார் . இதனால் அஷ்டமத்தில் அமர்தலும் குருவின் பார்வையால் ஓரளவு நன்மை கிடைக்கும் .

சிம்மம்
             ஏழரை சனியால் ஏற்பட்டுவரும் கெடு பலன்கள் குறைத்து ஆறுதல் தரும் .

கன்னி 
             தொழில் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தொழில் இடையுறு இருக்காது .

துலாம் 
              இந்த ராசிக்கு ஐந்தாம் இடமான கும்பத்தில் அமர்கிறார் . வாழ்வில் பல முன்னேற்ற பலன்கள் அள்ளித்தரும் , வீடு , வாகனம் வளர்ச்சி மற்றம் செய்து மகிழ்வீர்கள் .

விருச்சிகம் 
              நான்காம் இடத்தில் அமர்தலும் குரு பார்வை பெறுகிற ஸ்தானங்களில் இருந்து பலன் பெறுவீர்கள் . மன திடத்தை மேற்கொண்டால் வெற்றிக் கனியை பறிக்கலாம் .

தனுஷ்
            எதிர் மறையான பலன்கள் தரும் வகையில் உள்ளது .

மகரம்
             சம்பள உயர்வு ஏற்படும் , வழக்குகள் சாதகமாக அமையும் , வெளிப்புற மரியாதையை அதிகரிக்கும் , குரு பார்வையால் கோடி நன்மை கிடைக்கும் .

கும்பம் 
            ஜென்ம ராசிக்கு வருவதால் எதிர்மறையான முடிவுகள் வரும் , அதிகமான பாதிப்புகள் ஏற்படாது .

மீனம் 
            குழந்தைகளின் படிப்பு , தொழில் , கல்யாணம் என செலவுகள் ஆகும் . ஆன்மீக காரியங்கள் மூலம் செலவுகள் உண்டாகும் .

பரிகாரங்கள் 
ஆலங்குடி தட்சினாமூர்த்தி பூஜை , குருவாயூர் கிருஷ்ணன் பூஜை , குரு கிரக தோஷ நிவாரண எந்திரம் , ஜோதிடரின் ஆலோசனை கேட்டு புஷ்பராகம் அணிதல்

No comments:

Post a Comment